2020

dhoti for kids

என்னதான் டிப் டாப்பா ஆடை அணிந்தாலும் பாரம்பரிய ஆடைகள் அணியும் போது இருக்கக் கூடிய பெருமை வேறு எந்த ஆடையிலும் கிடைக்காது என்றே கூறலாம். குறிப்பாக ஆண்களின் ஆடைகளில் வேஷ்டி அணியும் பழக்கம் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வேஷ்டி தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை.தமிழர்களின் கலாசார அடையாளமாகவும், ஆண்களுக்கான கம்பீரத்தின் உணர்பொருளாகவும் வேஷ்டி தமிழர்களால் வரவேற்கப்படும் ஒரு ஆடையாகும்.தொன்று தொட்டு தமிழர்கள் வேஷ்டி அணியும் பழக்கத்தை இன்றும் தங்கள் வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

வேறு பெயர்கள்

தமிழர்கள் பெருமிதமாக அணியும் வேஷ்டி சம்ஸ்க்ருத மொழியில் தவுத்தா என்று பெயர். குஜராத்தில் தோத்தியு, ஒரிய மொழியில் தோத்தி, வங்காளத்தில் தூட்டி, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாபி மொழியில் லாச்சா, உ.பி, பீகார்மாநிலங்களில் மந்தாணி, கன்னட மொழியில் கச்சே-பான்ச்சே, அசாமியில் சூர்யா, தமிழகத்தில் வேட்டி மற்றும் வேஷ்டி என்று அழைப்பார்கள்.

வகைகள்

பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில், முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி என பல வகை உண்டு.

பண்பாடு

முதலில் வேஷ்டி நம் பாரம்பரிய அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆண்கள் அணியும் ஒரு சாதாரண உடையாக வேஷ்டி இருந்து வருகிறது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய ஆடையான வேஷ்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முக்கியமாக திருவிழா மற்றும் திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் வேஷ்டி அணிவதை பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர். இத்தகைய பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மிக்க வேஷ்டியின் மீது இன்றைய தலைமுறையினர் பெரிதும் ஆர்வம் கொள்ள தயங்குகின்றனர் .

ஏனெனில் மேற்கத்திய கலாசாரம் தொற்றி இருப்பதால், நவீன காலத்தில் வித, விதமான ஆடைகளை அணிய தொடங்கி விட்டோம். இருப்பினும் சில சமயங்களில் கட்டாயத்தின் பேரில் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். அந்தவகையில் புத்தாண்டு, பிறந்தநாள், பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கியமான கொண்டாட்டங்களில் இப்போது கட்டாயம் இடம் பிடித்திருப்பது, பட்டு வேஷ்டிகள்தான்.

இளம்சிறார்களிடையே வேஷ்டியின் வரவேற்பு

இன்றைய காலத்தில், சிறுவர்கள் பட்டு வேஷ்டி அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டு வேஷ்டி அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டு வேஷ்டியை சிறுவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் ச ஃபாரி, பெல்ஸ், பைஜாமா என்கிற ஜிப்பா மாடல் ஆடைகள், நேரோ, ஜீன்ஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழர் மரபாக, “பட்டு வேஷ்டிக்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.

சிறுவர்களுக்கான பிரத்யேக ரெடிமேட் கலெக்க்ஷன்ஸ்! சாரா வழங்கும் “அழகுராஜா”, பாரம்பரியம் மாறா பட்டு வேஷ்டி மற்றும் சட்டைகள்!

 1

தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் நம் தமிழர்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பெருமைமிகு பாரம்பரிய பட்டு ஆடைகள்தான். பட்டு ஆடைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றி அமைத்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டு ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பட்டு என்றாலே முதலில் நம் நினைவுக்கு தமிழகம் வருவதை தவிர்க்கவே முடியாத ஒன்று.

உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய ஆடைகளிலேயே “பட்டு” மிகவும் சிறப்பு வாய்ந்தது. எளிதில் உருவாக்க முடியாத கலை நயமிக்க பட்டாடை, அதன் பளபளப்பும், நிலைத்து நிற்கக்கூடிய தன்மையும் அதனை சிறப்பாக எடுத்துகாட்டுகிறது. பட்டுடைய மென்மை தன்மையும், அதன் பளபளப்பும், அணியும்போது  நமது அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன.

வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் அணிய முக்கிய பங்கு வகிப்பது பட்டு ஆடைகள் தான்.  பண்டிகைகளிலேயே குறிப்பாக பொங்கல், தீபாவளி திருநாளில் புது ஆடைகளை உடுத்தி மகிழ்வார்கள்.

பெண் குழந்தைகளை அழகாக காட்டும் ஆடை வகைகள் ஆயிரம் இருந்தாலும் அதில் குறிப்பாக தென்னிந்திய உடைகள் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பட்டு பாவாடையை கூறலாம். பட்டு பாவாடைக்கு என்று தனித்துவமும் வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது.சிறுவயதில் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை அணிந்து இங்கும் அங்கும் நடப்பதைப் பார்ப்பதற்கு அழகிய வண்ணத்துப் பூச்சி இங்கும் அங்கும் பறப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும் மாடர்ன் உடைகள் பல இருந்தாலும் குறிப்பாக மிகவும் அழகாக அணிந்து கொள்ளும் ஆடை என்றால்  பட்டு வேஸ்டி சர்ட் -யை கூறலாம். பட்டு வேஸ்டி மற்றும் சர்ட்-க்கு அதிக அளவில் வரவேற்பு இக்காலத்தில் காணப்பட்டு வருகிறது. இளம் சிறுவர்கள் பட்டு வேஸ்டி மட்டும் சர்ட் அணிந்து வரும்போது மிகவும் தோரணையாக காணப்படுவார்கள்.

விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில்  வேஸ்டி- சர்ட், பட்டுப்பாவாடையும்  கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!

எனவே, நமது சாரா-வில் பாரம்பரியமிக்க பட்டு பாவாடை மற்றும்  தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி & சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். இந்த தீப ஒளி திருநாளுக்கு நம்ம  சாரா ஃபேஷன்ஸ்- ன் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் பட்டு பாவாடை & தாவணி, பட்டு சர்ட் & வேஸ்டி யை வாங்கி அணிந்து மகிழுங்கள்!

 1
தாய்மாமன் சீதனம்

தமிழர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்தையும் ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசாரம் நிறைந்து இருப்பதை காணலாம். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். தாய்-தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அத்தை, மாமா உள்பட அனைத்து உறவுகளுக்கும் உரிய இடம் அளிக்கப்படுகிறது.

தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமன்

தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். தாய்மாமன் என்பவர் குழந்தை பிறந்தவுடன் முதல் உணவாக சீனிப்பால் அளிப்பதில் துவங்கி, காதணி விழா, நிச்சயதார்த்தம் மற்றும் திருமண விழா செய்வது வரை ஒரு தாய்மாமன் தனது பங்களிப்பை பெரிதும் அளித்து வருகிறார்.

உறவின் அருமையும் பெருமையும்

உறவுகளிலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உறவு என்றால் “தாய்மாமன்” உறவு தான். தனது தங்கைக்கு தகப்பனாய் அவள் பெரும் குழந்தைக்கு ஒரு பாதுகாவலனாய் அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிகொடுத்து அதன் முகத்தில் மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமனின் சிறப்பு. அக்கா/தங்கையின் குழந்தையை தன் குழந்தையை போன்றே நன்கு கவனிப்பார். அக்குழந்தையின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று அக்காலத்திலேயே தமிழர் பண்பாடு கூறுகிறது.

“சீருக்கு பேர்போன தாய்மாமன் உறவு”

“காது குத்துவதிலிருந்து திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுப்பது வரையிலும்” முன்னிற்பதே தாய்மாமன் தான்.

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காதுகளில் துளையிட்டு ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது.

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தங்கையின் மகள் பூப்பெய்தியதும் தாய் வீட்டுசீர்வரிசையாக (மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

“நிகரில்லா உறவு”

குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது. குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். தமிழர் பண்பாடு விளங்க, பாரம்பரியத்தை தொடருங்கள். அது உங்களுடைய உறவுகளை பலப்படுத்துவதோடு, உங்களின் பிள்ளைகளுக்கும் அந்த உறவுகளும், அதன் மூலமான உணர்வுகளும் தொடர்ந்து கிடைக்கும்.

இந்த அனைத்து விதமான விசேஷங்களில் தாய்மாமன் சீர்கள் முன்னிற்கும். இந்த சீர்களிலேயே பெருமையாக பேசப்படுவது “பட்டு” தான். இந்த பெருமையை இன்னும் மிகைப்படுத்துவதற்காவே தாய்மாமன் விலையுயர்ந்த மற்றும் தரமான பட்டு கொடுப்பார்.  இதுமட்டுமல்லாமல், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர் கொடுக்கும் சீர்வரிசையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். ஆகவே காதணி விழா முதல் திருமண விழா வரை அனைத்திற்கும் பட்டு துணி முக்கிய பங்கு வகிக்கிறது.

பட்டு என்றாலே சாரா

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரத்தின் பழைமையை நினைவு படுத்தும் விதமாகவும், வருங்கால சந்ததிகளுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் “தாய் மாமன் சீதனம்” என்பதை வழங்குகிறது “சாரா “.

 1
half saree model

Pattu Lehengas: Most of the south Indian girls like to wear pattu lehenga for any occasions which is available in traditional and modern looks. In addition, traditional embroidery, zari work, beadwork like prints, shimmer lehenga’s in the market.

Young girls from states of south India wear pattu lehengas. They are usually made of cotton silk. In fact, traditional pattu lehenga will worn during the special south Indian festivals. You should go for traditional wedding colours like reds, orange, pinks.

Red – Effortlessly Stylish!

Important to realize, red is such a bold colour that pattu lehengas look better when they are kept simple, with a standard style.

This type of traditional simple red colour lehenga ranges from an orange-red sunset hue to a deep blood red. You didn’t require to go monotone – trying something contrasting blouse in violet or blue. Or a thick bottom border in dull gold its look stunning.

 

Red Pattu Lehenga     Red Pattu Lehenga

 

Classically Beautiful – Pink Color Pattu Lehenga

A simple pink colour half saree in pattu with golden thread work is an ensemble that can make you the cynosure of all eyes.  There are so many various combinations to wear a lehenga. You may leave a lasting impression with every one of them.

 

pattu lehenga     Pink Pattu Lehenga

 

Wedding season is coming up. All are going for wedding wear shopping. Shop some stunning and elegant outfits from Saara.

 Like
Readymade Pattupavadai

இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தமிழகம், வளமான கலாச்சாரம் மற்றும் ஆடம்பரமான கோவில்களுக்கு புகழ் பெற்ற மாநிலமாகும். மிகவும் மதிப்புமிக்க கோவில்கள் இங்கு இருப்பதால், கோயில்களின் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. மற்ற தென்னிந்தியர்களைப் போலவே, தமிழர்களும் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்.

இந்த மாநிலமானது சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் வளமான கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சம் அதன் பாரம்பரிய உடைகள் ஆகும். குறிப்பாக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிவதற்கு மிகவும் மரியாதை செலுத்துகிறார்கள்.

பாரம்பரிய ஆடைகளின் மகத்துவம்

தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கு தனி மகத்துவம் இருக்கிறது.

பட்டு பாவாடை தாவணியில் வரும் சுட்டி பெண்கள் பறக்கும் பட்டாம் பூச்சிகள் என்றும்; பட்டு கரை போட்ட வேஸ்டி கட்டிக்கொண்டு, அரும்பு மீசையை முருக்கிவிட்டபடி செல்லும்  ஆண்கள் கட்டிளங் காளையர்கள்; என்று வர்ணித்து ரசிக்கிறதே!

இந்த அடையாளம் தான் தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இது வெறும் உடை அல்ல. நம் உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் தான் அடங்கி இருக்கிறது.

என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில்  வேஸ்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!

 ரெடிமேடு பட்டு என்றாலே “சாரா ஃபேஷன்ஸ்” தான்

“ரெடிமேடு பட்டு பாவாடை” யை அறிமுகம் செய்தது நம்ம  சாரா ஃபேஷன்ஸ்.

ஆரம்ப காலத்தில் நாங்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் மட்டுமே வைத்து  சுடிதார்களை தைத்து வந்தோம். அக்கட்டத்தில் சுடிதார் மெட்டீரியல்களுக்கு கடும் போட்டி இருந்தது. எனவே  மக்களுக்கு எங்களை வேறுபடுத்தி  காட்டவேண்டுமென்றும் மற்றும் தனித்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்தோடும், புதிதாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் ஒரு சின்ன யோசனை “பட்டு பாவாடையை ரெடிமேடு-ஆக தைத்தால் எப்படி இருக்கும்” என தோன்றியது. அந்த முயற்சியில் தான் ரெடிமேடு பட்டு பாவாடையை அறிமுகப்படுத்தினோம்.

அந்த சிறு யோசனை தான் இப்பொழுது, தூங்காநகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டத்தில் “சாரா ஃபேஷன்ஸ்” பிரபலகமாக விளங்கி நிற்கிறது. இந்த தலைமுறையினருக்கு பிடித்தவாறு பிரத்யேகமான டிசைன்ஸ் மற்றும் எண்ணற்ற வண்ணங்களுடன் உயர்தரம் வாய்ந்த பட்டு பாவாடையை தயாரித்து வழங்கி வருகிறோம்.

பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் தயாரித்து வருகிறோம். “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

பட்டு பாவாடை மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணங்களுடன் பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம  சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 Like

Glorifies Your Look with Saara!


Store Location

Saara Fashions
3/184, Alagarkovil Main Road,
Madurai – 625 301. Tamilnadu, India.
Phone : +91 452 - 2470318, 2470320, Mobile: +91 95974-49419
Email : saarafashions@gmail.com, info@saarafashions.com

Hi there! Click one of our representatives below and we will get back to you as soon as possible.

Chat with us on WhatsApp
Your Name
Your Mobile
*All information provided will be kept confidential.
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message
Your Name
Your Mobile
Message