இந்தியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தமிழகம், வளமான கலாச்சாரம் மற்றும் ஆடம்பரமான கோவில்களுக்கு புகழ் பெற்ற மாநிலமாகும். மிகவும் மதிப்புமிக்க கோவில்கள் இங்கு இருப்பதால், கோயில்களின் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. மற்ற தென்னிந்தியர்களைப் போலவே, தமிழர்களும் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்.

இந்த மாநிலமானது சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டு, பின்னர் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் வளமான கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சம் அதன் பாரம்பரிய உடைகள் ஆகும். குறிப்பாக தமிழர்கள் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிவதற்கு மிகவும் மரியாதை செலுத்துகிறார்கள்.

பாரம்பரிய ஆடைகளின் மகத்துவம்

தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கு தனி மகத்துவம் இருக்கிறது.

பட்டு பாவாடை தாவணியில் வரும் சுட்டி பெண்கள் பறக்கும் பட்டாம் பூச்சிகள் என்றும்; பட்டு கரை போட்ட வேஸ்டி கட்டிக்கொண்டு, அரும்பு மீசையை முருக்கிவிட்டபடி செல்லும்  ஆண்கள் கட்டிளங் காளையர்கள்; என்று வர்ணித்து ரசிக்கிறதே!

இந்த அடையாளம் தான் தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை அஸ்திவாரம் எல்லாமும். இது வெறும் உடை அல்ல. நம் உடைமொழி. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தமிழர்களைப்பற்றிய புரிதல் எல்லாமே இந்த பாரம்பரிய ஆடைக்குள் தான் அடங்கி இருக்கிறது.

என்ன விலை கொடுத்து உயர்ந்த நாகரீகத்தின் அடையாளம் என்ற எண்ணத்தில் விதவிதமான ஆடையை வாங்கி அணிந்தாலும் முக்கிய விசேஷ நாட்களில் மற்றும் திருவிழா நாட்களில்  வேஸ்டி-சட்டையும், பட்டுப்புடவையும் கட்டிவரும் அழகே தனி அழகாக அல்லவா தெரிகிறது!

 ரெடிமேடு பட்டு என்றாலே “சாரா ஃபேஷன்ஸ்” தான்

“ரெடிமேடு பட்டு பாவாடை” யை அறிமுகம் செய்தது நம்ம  சாரா ஃபேஷன்ஸ்.

ஆரம்ப காலத்தில் நாங்கள் ஐந்து தையல் இயந்திரங்கள் மட்டுமே வைத்து  சுடிதார்களை தைத்து வந்தோம். அக்கட்டத்தில் சுடிதார் மெட்டீரியல்களுக்கு கடும் போட்டி இருந்தது. எனவே  மக்களுக்கு எங்களை வேறுபடுத்தி  காட்டவேண்டுமென்றும் மற்றும் தனித்து நிற்கவேண்டும் என்ற எண்ணத்தோடும், புதிதாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் ஒரு சின்ன யோசனை “பட்டு பாவாடையை ரெடிமேடு-ஆக தைத்தால் எப்படி இருக்கும்” என தோன்றியது. அந்த முயற்சியில் தான் ரெடிமேடு பட்டு பாவாடையை அறிமுகப்படுத்தினோம்.

அந்த சிறு யோசனை தான் இப்பொழுது, தூங்காநகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டத்தில் “சாரா ஃபேஷன்ஸ்” பிரபலகமாக விளங்கி நிற்கிறது. இந்த தலைமுறையினருக்கு பிடித்தவாறு பிரத்யேகமான டிசைன்ஸ் மற்றும் எண்ணற்ற வண்ணங்களுடன் உயர்தரம் வாய்ந்த பட்டு பாவாடையை தயாரித்து வழங்கி வருகிறோம்.

பிறந்த குழந்தை முதல் டீனேஜ் பெண்கள் வரை அனைவருக்கும் தயாரித்து வருகிறோம். “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

பட்டு பாவாடை மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த பட்டு வேஸ்டி மற்றும் கண்களை பறிக்கும் வண்ணங்களுடன் பட்டு சர்ட் தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளைஞர் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். நம்ம  சாரா ஃபேஷன்ஸ்-ல் உயர்தரம் வாய்ந்த மற்றும் கண்களை கவரும் வகையில் பட்டு பாவாடை & தாவணி மற்றும் பட்டு சர்ட் & வேஸ்டி பிரத்யேகமாக தயாரித்து வருகிறோம்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 Like